Surah Al-'adiyat ( Those That Run )

தமிழ்

Surah Al-'adiyat ( Those That Run ) - Aya count 11

وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا ﴿١﴾

மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-

فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا ﴿٢﴾

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا ﴿٣﴾

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا ﴿٤﴾

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ﴿٥﴾

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-

إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ ﴿٦﴾

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ ﴿٧﴾

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ﴿٨﴾

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ﴿٩﴾

அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ﴿١٠﴾

மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ ﴿١١﴾

நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.